Tuesday, March 30, 2010

பங்குனி உத்திரம்,பவுர்ணமியும் தெய்வத்திருமணங்களும்

திரு முருகன் வள்ளி தெய்வானை
ஸ்ரீ  கற்பகாம்பாள் கபாலீஸ்வரர்
SRIRANGAM DHIVYA THAMBATHIYAR
அறுபத்துமூவர் பூர்த்தியான அடுத்த நாள் கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் அம்மா கையைப் பிடித்துப் பௌர்ணமி நிலவு ஒளிவீசத் திருமணம் செய்கிறார்.ஸ்ரீ ரங்கராஜன் ஸ்ரீரங்கத்தில் தாயார் ரங்கநாயகியுடன் சேர்த்தி கண்டருள் புரிகிறான்.




திரு முருகனோ தெய்வயானையின் கரம் பிடித்து ,சுற்றம் சூழத் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறான்.



இந்தத் திருமணங்களைக் காண முழுநிலவோ தன் பூர்ணபொலிவுடன் விரைந்து வந்து

அத்தனை திருமணங்களுக்கும் சாட்சியாக நிற்கிறான்.



இந்த நல்ல நாளில் அனைவரும் மன சஞ்சலங்கள் அனைத்தும் நீங்கி,

தெய்வத் திரு தம்பதிகளைப் போலவே மனம் ஒன்றி,

மகிழ்ச்சியாக இருப்போம்.

அப்படி இருக்க அவன் பாதங்களே சரணம்.