Saturday, August 20, 2011
Tuesday, August 16, 2011
பாரீசுக்குப் போ..............
பாரீசுக்குப் போகலாமா என்று மகன் கேட்டதும் நினைவுக்கு வந்தது பல சமாசாரங்கள்.
ஜெயகாந்தன் ஐய்யாவின் "பாரீசுக்குப் போ" நாவல். இசைஆர்வத்தில், ஒரு பழமையான கலாசாரத்திலிருந்து
முரட்டுத்தனமாகத் தன்னை விடுவித்துக் கொண்டு பாரீஸ் செல்லும் ஒரு இளைஞனின்
கதை..
இரண்டாவது மறைந்த இந்தி நடிகர் ஷம்மிகபூரின் நடிப்பில் வெளிவந்த ஆன் ஈவனிங்க் இன் பாரீஸ்
மூன்றாவது,
சிவந்த மண் திரைப்படத்தில் இடம் பெற்ற "ஒரு ராஜா ராணி யிடம்" பாடல்
ஏதாவது ஐரோப்பிய நாட்டுக்குப் போகவேண்டுமென்ற எண்ணம். பாரீஸ் வென்றது.
மூன்றரை மணி நேரப் பயணம் குழந்தைகளுக்கும் எங்களுக்கும் நன்மை.
தங்கும் விடுதியெல்லாம் நான்கு மாதம் முன்னாலயே பதிவு செய்திருந்தார் மகன்.
சென்ற வியாழன் காலை எட்டு மணி டிஜிவி ரயிலில் கிளம்பத்தயாரானோம்.
இருக்கைகள் அனைத்தும் மிக வசதி. வேகமோ அதிகம்.
ஏறினதுதான் தெரியும்.
அலுங்காமல் குலுங்காமல் 500 கிலோமீட்டர் தூரம் கடந்து விட்டோம்.
இருக்கும் நேரத்தை வேணாக்காமல் ஊர் சுற்றிப் பார்க்கணும்.
சாப்பாடு, ரெஸ்ட் எடுக்கிறது இதெல்லாம் கொஞ்ச நேரம் தான் ஒதுக்கணும்.
இரவு நேர விளக்கு வெளிச்சத்தில் நகரைக் காணவேண்டும் என்றெல்லாம்
திட்டம்.
முடிந்தது கொஞ்சம் தான். அந்த ஊருக்கு மூன்று நாள் எல்லாம் போதாது.:)
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
ஜெயகாந்தன் ஐய்யாவின் "பாரீசுக்குப் போ" நாவல். இசைஆர்வத்தில், ஒரு பழமையான கலாசாரத்திலிருந்து
முரட்டுத்தனமாகத் தன்னை விடுவித்துக் கொண்டு பாரீஸ் செல்லும் ஒரு இளைஞனின்
கதை..
இரண்டாவது மறைந்த இந்தி நடிகர் ஷம்மிகபூரின் நடிப்பில் வெளிவந்த ஆன் ஈவனிங்க் இன் பாரீஸ்
மூன்றாவது,
சிவந்த மண் திரைப்படத்தில் இடம் பெற்ற "ஒரு ராஜா ராணி யிடம்" பாடல்
இடம் பெற்ற இடமாகப் பாரீஸை நான் நினைத்தது.:)
இன்னும் எத்தனையோ கதை,திரைப்படங்கள் வந்தாலும் எனக்கு உகந்தவை இந்த நினைவுகளே.
ஏதாவது ஐரோப்பிய நாட்டுக்குப் போகவேண்டுமென்ற எண்ணம். பாரீஸ் வென்றது.
மூன்றரை மணி நேரப் பயணம் குழந்தைகளுக்கும் எங்களுக்கும் நன்மை.
தங்கும் விடுதியெல்லாம் நான்கு மாதம் முன்னாலயே பதிவு செய்திருந்தார் மகன்.
சென்ற வியாழன் காலை எட்டு மணி டிஜிவி ரயிலில் கிளம்பத்தயாரானோம்.
இருக்கைகள் அனைத்தும் மிக வசதி. வேகமோ அதிகம்.
ஏறினதுதான் தெரியும்.
அலுங்காமல் குலுங்காமல் 500 கிலோமீட்டர் தூரம் கடந்து விட்டோம்.
இருக்கும் நேரத்தை வேணாக்காமல் ஊர் சுற்றிப் பார்க்கணும்.
சாப்பாடு, ரெஸ்ட் எடுக்கிறது இதெல்லாம் கொஞ்ச நேரம் தான் ஒதுக்கணும்.
இரவு நேர விளக்கு வெளிச்சத்தில் நகரைக் காணவேண்டும் என்றெல்லாம்
திட்டம்.
முடிந்தது கொஞ்சம் தான். அந்த ஊருக்கு மூன்று நாள் எல்லாம் போதாது.:)
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Subscribe to:
Posts (Atom)