Friday, September 30, 2011

கொலு வைத்தாச்சு. கண்டு மகிழ வாருங்கள்.




புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
நவராத்திரி வருவதற்கு  முன் நான்கு நாட்களாக  குதித்துக் கொண்டிருந்தது பேத்திதான்.
இயந்திரமாகப் பொம்மைகளைக் கீழெ
இறக்கி, கைகள் கால்கள் , முகம் எல்லாம் சரியாக இருக்கிற்தா  என்று பார்த்து

ஒவ்வொன்றாகப் பிரிக்கும் போது  அவள் முகத்தில்  தெரிந்த ஆனந்ததைத்தைப் பார்க்க வேணுமே.

''கான் ஐ டச் தெம் பாட்டி.
க்ரிஷ்னா உம்மாச்சி  நிறைய வச்சிருக்கியா.
தினம் வருவாரா.
நான் தினம் கூப்பிடறேனே
சொப்பனத்தில வர மாட்டேன்  என்கிறாரெ.
ஐ லவ் ஹிம் சோ மச்.!!''
இன்னோரு ஆண்டாளா!
வருவார் என்று சொல்லி வைத்திருக்கிறேன்.
அவளுக்காக வருவான் கண்ணன்.
Posted by Picasa