Friday, September 02, 2011

துபாய்க் காட்சிகள்




புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
oasis
புதிதாகப்  பார்த்த கட்டிடம்
வளர்ந்து வரும்  சிலிகான் ஓயாசிஸ்.
வெய்யில்  சூடு,தாகம
நோன்பு மாதம்
  இது எங்கள் பயணத்தின்  அம்சங்கள்  இந்தத் தடவை.
ஒரு மெட்ரோ பயணமும்  பேத்தியுடன் போய் வந்தோம்.
ரொம்ப ஜாக்கிரதையாகப் பாட்டி  கையைப் பிடித்துக் கொண்டு நடந்தது குழந்தை. பாட்டிக்குக் கால் தடுக்குமாம்.




 பூனை பொம்மையையும் தூக்கிக்கொண்டு  வரும்
 அழகை
மழலை மாறாமல்  பேசிக்கொண்டே வரும்
நேர்த்தியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
இன்னும் இரண்டு நாளில் துபாயிலிருந்து கிளம்பிச் சென்னை போகிறோம்.
அமீரக நண்பர்கள் ஒருவரையும் சந்திக்க முடியாத சூழல்.
நேரில் பார்க்காமல் வளர்ந்த நட்பு  இல்லையா. அப்படியே
வளரட்டும்.
ஹுசைனம்மா அருமையாகப் பேசி நமக்கு இந்தப் பதிவுலகத்தைத் தாண்டி உறவு இருக்கிறது என்று நிரூபித்தார்.
 . 

.  பதிவர்கள் அனைவரின் தொலைபேசி எண்களும்  இப்பொழுது  என்னிடம் இல்லை  .
சந்திக்கப் பேசமுடியாத வருத்தம் கொஞ்சம்  இருக்கத்தான் செய்கிறது.பத்து நாட்களில் என்ன செய்ய முடியும்.:(

அமீரக நண்பர்களுக்கு வணக்கம் சொல்லி விடை பெறுகிறோம்.




Posted by Picasa

Tuesday, August 30, 2011

வெற்றிக் கொடி கட்டு


மரங்களும் சொன்ன பேச்சைக் கேட்கும் பாரீஸ்

புதிய பாரீஸ்
போரின் அவலம்
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
இந்தப் படங்களுக்கான விளக்கங்கள் கூகிலாரைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள
வேண்டும்.
ஒரு தரமான ஆங்கிலம் பேசும் வழிகாட்டி கிடைக்கவில்லை.
நேரமும் கொஞ்சம்.
 கிராமத்தான் உயிர் காலேஜ், செத்த காலேஜ்

.பார்த்த  கதைதான்.:(
இருந்தாலும் கலையை ரசிக்க நமக்குக் கதை வேண்டாமே.

அதைத்தான் இங்கே படங்களாகப் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த லிங்கில் வெற்றி வளைவின்    விளக்கங்கள் இருக்கின்றன.
பேரரசன்

    நெப்போலியன் ஆஸ்திரியாவை வென்று அந்த ஊர்  இளவரசியை மனம் புரிந்து வந்தபோது  இந்த  வெற்றி
 வளைவைக் கட்டத் தீர்மானம் செய்யப் பட்டது. 
அவர்   செயின்ட்  ஹெலினா தீவில் இறந்த பிறகு
 அவரது சாம்பலும் இறுதி ஊர்வலமாக இந்த
மண்டபம் வழியாக எடுத்துச் செல்லப் பட்டதாகக் குறித்து   இருக்கிறார்கள்.
வளைவுக்கு வெளியே அணையா தீபம் ஒன்றும்  எரிந்து கொண்டிருக்கிறது.
 பிரெஞ்ச் வீரர்
இறந்ததை
கௌரவிக்கும் வண்ணம்.,  இங்கே நினைவுச் சின்னங்களும் சிற்பங்களும் எழுப்பப் பட்டிருக்கின்றன.




இங்கு இன்று ஈத்
 பிறை காணப்பட்ட செய்தி. இன்னும் நான்கு நாட்களுக்கு ரமதான் கொண்டாட்டங்களுக்கு  ஊடகங்கள் தயார் நிலையில் இருக்கின்றன.

அனைவருக்கும்   ரம்ஜான் திரு நாள் வாழ்த்துகள்.