Sunday, December 11, 2011

நேயர்விருப்பம் கிரஹணம் விலகிய சந்திரன்




புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

பூரணச் சந்திரன் ஆனால் தெளிவில்லாத  பார்வை.
கண்ணில் குறையில்லை.
காமிராவிலும் குறையில்லை.
குளித்துவந்தது போலக்
குளிர்கால நிலா.
எப்போது என்னை முழுமையாக அழகாக
படம் எடுக்கப் போகிறாய் என்று கேட்டது.
இது ராமலக்ஷ்மிக்காக  எடுக்கிறேன்.
அதுக்காகவாவது ஒரே மாதிரி நில்லேன் என்றேன்.

நான் ஆடவில்லை அம்மா
உன்கையாடுது என்று எதிர்ப்பாட்டு பாடிவிட்டது சந்திரிகா:)







Posted by Picasa

Friday, November 25, 2011

வசந்தகாலப் பூக்கள்

காகிதப் பூ
Add caption
கத்தாழைப்பூ
போகெய்ன்வில்லா
அழகான ஆர்க்கிட்
மணமேடைப்  பூக்கள்



புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

Wednesday, November 23, 2011

கார்த்திகை லட்சுமி பத்மாவதி திருப்பதி

திருச்சானூர் தேவி பத்மாவதி
கார்த்திகை வெளிச்சம்
சிகாகோ  பாலாஜி
கார்த்திகை மாதம் வளர்பிறை பஞ்சமி யும் உத்திராடமும் சேர்ந்த
நன்னாள் ,திருச்சுகனூர் அருள்மிகு பத்மாவதிதாயார் ,தாமரையில் தோன்றிய தினம்.
இப்பொழுது விஜய் தொலைக் காட்சியில் தினம் காலை ஐந்து மணியிலிருந்து

அந்தபிரம்மோத்சவக் காட்சிகளைக்  காண்பிக்கிறார்கள்.
இங்கிருக்கும் இரண்டு படங்களைத் தவிர மற்றவை கூகிளார் கொடுத்தவை.

தேவியின் பார்வை விழும் இடங்களில் எல்லாம் வறுமையும்,துக்கமும் ,நோயும்  இல்லாமல் தூளாகப் போய்விடுமாம்.
துன்பம் நேர்கையில் மட்டும் யாழ் எடுக்காமல் எப்பொழுதுமே அவளின் பண் பாடினால்  அழியாத இன்பம் கிடைக்கும் என்பது என் தீவிர நம்பிக்கை.

தாயார் என்றுதானே அவளை  விளிக்கிறோம். அன்னை அவளை நினைத்தால் அதிக வரம் பெறலாம்.
எதையுமே  வேண்டாத வரத்தையும் அவளே அருள்வாள்.




புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

Sunday, November 13, 2011

வளமோடு வாழ வாழ்த்துகள்





புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
  எங்கள்  புதல்வனுக்கும்
பதிவுலகில் இருக்கும் இன்னோரு  மகனுக்கும் இன்று பிறந்த நாள்.
இருவருக்கும் எங்கள் மனம் நிறைந்த நல் வாழ்த்துகள்.
அமைதியும்   ஆனந்தமும் உங்கள் வாழ்க்கையில் மிக வேண்டும். உங்கள் குடும்பமும் நீங்களும் என்றும் செழிக்க வேண்டும்.

Posted by Picasa

Friday, November 11, 2011

ஐப்பசி முழு நிலவு

இலைகளின் ஊடல் நிலவோடு
உதிக்கும் நிலவு இருக்கிறதே அது கூட நம்காமிராவைப் பார்த்தே சிரிக்கும்:)
இந்த மாதிரி முழு வட்டம் எங்கயாவது பார்க்க முடியுமா...
எப்படி இந்த  ஆரஞ்சு வர்ணம்? புரியவில்லை.
கண்ணில்  காணும் காட்சி,காமிராவின் காட்சி!  நிலவுக்கு சுற்றி  எத்தனை  வர்ணங்கள்.



புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

Tuesday, November 08, 2011

கனவாகிய தொழிற்சாலை..சினிமா

சாவித்திரியும் குழந்தைகளும்
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

எத்தனை படங்கள்

எவ்வளவு நட்சத்திரங்கள், எல்லோருமே என் விஷயத்தில் மிகவும்

நன்மை செய்தவர்கள். இந்தப் பதிவிலும் இதற்கு முந்தின பதிவிலும் எனக்கு உள்ள சினிமா (மெமரி) டைரக்டரியிலிருந்து

சில நபர்களின் புகைப்படங்கள்,திரை ஸ்டில்கள் என்று முடிந்த வரை (எனக்குப் பிடித்த நடிக நடிகையரின்) கொடுத்து இருக்கிறேன்.

எத்தனையொ ஆயிரக்கணக்கான முகங்கள் திரையில் மின்னி நமக்கு இன்பத்தையும் ,நிறைவையும் கொடுத்து இருக்கிறார்கள். அவர்களில் சிலர் இவர்கள்.

இவர்களில் முதல்வர் வேறு யாரக இருக்க முடியும். நம்ம சிவாஜி சார் தான்.

அடுத்தது.எஸ்.வீ.ரங்கராவ். எப்போதுமே இனிமையான கம்பீரம். நாகரீகமான தோற்றம்.பண்பட்ட நடிப்பு. நமது சொந்தப் பெரியப்பாவையோ மாமாவையோ நினைவு படுத்தும் கனிவு.

எப்போதுமே ஆனந்தம் தம் கல்யாண சமையல் சாதம் இவர்.

அலுக்கவே அலுக்காத குரல். இறைவன் இவரை இன்னும் கொஞ்ச நாள் விட்டு வைத்து இருக்கலாம்.

இவருக்கு அடுத்தாற்போல் நம்மைக் கவருவது பானுமதி அம்மாவும் சாவித்திரியும் தான்.

ஒரு பாசமலர் தங்கை, ஒரு அன்னை, ஒரு மயங்குகிறாள் ஒரு மாது பாட்டு,

'சொன்ன பேச்சை கேக்கணும் முன்னும் பின்னும் பாக்கணும்"

பூவாகிக் காயாகி.//

வெங்கடாசல நிலையம் வைகுண்டபுர வாசம்//

இதே போல் மறக்க முடியாத வாய்த்துடுக்கு,சிவாஜி சாருக்கு இணையான நடிப்பு.

அவரது எழுத்துக்கள் , பன்முகத்திறமை

எல்லாமே இவரைப்போல் பெண்கள் இன்னும் நிறைய

திரை உலகுக்கு வரவில்லையே என்று தோன்றும்.

சாவித்திரி அம்மாவும் இதே போல்,

ஆனால் பாச மழை,காதல் ரசம் கண்ணாலெயே பேசுவது

அந்தக் காலத்தில் கண்களுக்கு யார் ஒப்பனை செய்தார்களோ தெரியாது.

உடல் வளம் எப்படி இருந்தாலும் முகம் நினைவில்

நிற்கும்படியாக மேக்கப் செய்து இருப்பார்கள். அவை அழியாத சித்திரங்கள் ஆகி நம் மனதை நிரப்பும்.

இதே போல் பத்மினியும், வைஜயந்தி மாலா,சரொஜாதேவி அம்மாவும் நடிப்பினாலும் திரை அழகினாலும் எங்களை மயக்கினவர்கள்.

இந்தப்  பதிவை மீள் பதிவாக விட்டுவிட   மனமில்லை.

தினமும்''தேன் கிண்ணம் '' பாடல்களைக் கேட்கும்போது

பாடல்கள் காதை நனைப்பதைப் போல   அவ்ரகளின் நடிப்பு மனத்தை நிரப்புகிறது.அவர்களுக்கே இந்தப் பதிவு   சம்ர்ப்பணம்.











Monday, November 07, 2011

நண்பேண்டா....பிட் புகைப்படப் போட்டிக்கு

நண்பேண்டா:0)
நாங்கள்   நல்ல  தோழிகள் தான்
கண்கூசுதே
மெஹந்தி எனக்குதான் நல்லா பத்தியிருக்கு
ரொம்ப எட்டிப் பார்க்காதே



புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

Tuesday, November 01, 2011

வட அமெரிக்காவின் க்ராண்ட் கான்யான் மலைத்தொடர்

மலைமுகடுகளில் சூரியனின் கிரணங்கள்

Add caption

இருள் படிய ஆரம்பிக்கிறது
 கீழே நீலமாகத் தெரிவது கொலராடோ நதி.

Golden valley


யுகங்களாக நதி  அரித்து எடுத்த மண்



புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa