Tuesday, September 13, 2011

அமைதி நிலா அதிகாலையில்........

நிற்க நேரம் இல்லாமல்  வேலைகளும் தொலைபேசி அழைப்புகளும்
நிறைந்து  இருக்கும் காலம். இன்னும் இரண்டு நாட்களில் கடைக்குட்டியின்
 குடும்பம் வந்து இறங்குகிறது. அவர்களது திருப்பதி பயணம்.
இத்தியாதி  விவரங்களை ஏற்பாடு செய்வதிலும்

குழந்தையின் அப்த பூர்த்திக்கான சிறிய அளவிலான
விழாவுக்கான   பரபரப்பிலும்  நொடிகள் பறக்கின்றன.

இருந்தாலும் நிலவை மறக்க முடியவில்லை.
என்னைப் படம் பிடிக்காமல் எப்படி இருப்பாய் என்று ஜன்னல் வழியே
என்னைத் தட்டி எழுப்பிய ஒளி.
நேரம் காலை நான்கு:)

மனதுக்குப் பிடித்த தோழ்யை இருதயத்திலும் கண்களிலும்  நிறைய
 வாங்கிக் கொண்டாலும் காமிராவிலும்
பிடித்துக் கொள்ள ஆசை.
என்னைவிட  அழகு இந்த உலகில் யார் என்று கேட்கும் தோற்றம் இந்த நிலா அம்மாவுக்கு.
எதிர்த்த வீட்டு வாட்ச்மான்  ''அம்மா இத்தனை சீக்கிரம் ஏன் வெளி வருகிறார்?
பண்டிகை கூட இல்லையே.''
என்று என்னைப் புதிராகப் பார்க்கிறார்:)




புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.