Monday, March 19, 2012

தோட்டக் கண்காட்சி

 


புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

Sunday, March 18, 2012

மேலும் சில படங்கள்




புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

Monday, February 27, 2012

வண்ணச் சிட்டுகள்

கூடி வாழ்ந்தால்  கோடி நன்மை
அம்மா,அப்பா,பிள்ளை மூவரும் தானிய வேட்டைக்குக் கிளம்பிய போது

அம்மா சொன்னது,பையா நீ அப்பாவோடு இரு.
நான்   தானியங்களைக் கொண்டு வந்து தருகிறேன்.
மனிதர்கள் காமிரா கையோடு அலைகிறார்கள். அவர்கள் காலடியில் மாட்டிக் கொள்ளாதே''என்றது.
பிள்ளைக்கோ தன்னை யாராவது படம் எடுத்தால் நன்றாக இருக்குமே
என்று, காமிராக் காரர்கள் பின்னால் அலைந்தது.


ஒரு நிமிடத்தில்    ஒரு வயதானவரின் கைப்பிடி நழுவி அதன்
பக்கத்தில் தொபால் என்று விழவும்
அதிர்ச்சியோடு அலறிய குட்டிப் பிள்ளை அம்மாவிடம் அடைக்கலம் தேடியது.
உடனே அந்த இடத்தில்  இருந்த அத்தனை குருவிகளும் சேர்ந்து, வந்திருப்பவர்களைத் திட்டித் தீர்த்தன.:(

புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
2008  அமெரிக்கப் பயணத்தின் போது எடுத்த
படங்கள்.(செயிண்ட் லூயிஸ்)
அதைச் சுற்றி  ஒரு கதையும் 
பின்னிப் பேரனிடம் சொன்னேன்.
அப்போது அவனுக்குப் பத்துவயது.
''அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்''னு ஒரு பழமொழி இருக்குப்பா. நீ எங்களைவிட்டுத் தனியாகச் சுற்றக் கூடாது என்று 
அறிவுரை சொல்லுவதுபோல
அவனைப் பார்த்தேன்.
  • பாட்டி உனக்கு எப்பவும்    வழிதவறிவிடுவோமான்னு பயமாக
  • இருக்கா. நான் உன்னுடனேயே இருக்கிறேன். பயப்படாதே என்று என் கையைப் பிடித்துக் கொண்டவன்  அந்த இடத்தைச் சுற்றிப்பார்க்கும் வரை விடவில்லை:)

Friday, February 17, 2012

பிட்'' டில் ஒரு அருமையான சந்தர்ப்பம்

பெர்ன்  நகர்க் கடைவீதி
பார்க்கலாம். பர்ஸைத் தொடக்கூடாது
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பொம்மையாக இருக்கிறதினால்ப்  படம் எடுக்கிற.  நிஜம இருந்தா  பக்கத்தில வருவியா:)
எல்லாம் உங்க வீட்டு மீனாட்சிக்கு உறவுதான். நான் சிகாகோ அவ உங்க வீடு.
எப்பவும்  பார்க்கலாம்  வாங்க வேண்டாமே



புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

Tuesday, February 07, 2012

அண்மைக் காட்சி

புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

வளர்பிறை சந்திரன்

http://google.saregama.com/music/pages/listen_popup?mode=listen_popup&query=INH109238940

இவருடைய சௌத்வின் கா சாந்த்பாடலை இந்த லின்கில் உங்களால் கேட்க முடிந்தால் நான் சந்தோஷப்படுவேன்.:)நன்றி துளசி
இது பவுர்ணமி தைப் பூச நிலவு.

 வளர்பிறை  நிலா பதினாலாம் நாள். ஒரு மாற்றத்துக்கு  பவுர்ணமிக்கு முன் தினம் எடுக்கலாமே  என்று தோன்றியது.

புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

Sunday, January 08, 2012

மார்கழித் திங்களின் திங்கள்

புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
புத்தம் புது நிலவு.

மாதம் முப்பது நாட்களும்
இரவுகளில் பறிபோகிற
நன்மைகளை நான் மீட்டுக் கொடுப்பேன்( என்று)
இறைவன்  சொல்லும் வரம் நான்
என்னும் முழுநிலா.

Sunday, December 11, 2011

நேயர்விருப்பம் கிரஹணம் விலகிய சந்திரன்




புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

பூரணச் சந்திரன் ஆனால் தெளிவில்லாத  பார்வை.
கண்ணில் குறையில்லை.
காமிராவிலும் குறையில்லை.
குளித்துவந்தது போலக்
குளிர்கால நிலா.
எப்போது என்னை முழுமையாக அழகாக
படம் எடுக்கப் போகிறாய் என்று கேட்டது.
இது ராமலக்ஷ்மிக்காக  எடுக்கிறேன்.
அதுக்காகவாவது ஒரே மாதிரி நில்லேன் என்றேன்.

நான் ஆடவில்லை அம்மா
உன்கையாடுது என்று எதிர்ப்பாட்டு பாடிவிட்டது சந்திரிகா:)







Posted by Picasa