Wednesday, November 23, 2011

கார்த்திகை லட்சுமி பத்மாவதி திருப்பதி

திருச்சானூர் தேவி பத்மாவதி
கார்த்திகை வெளிச்சம்
சிகாகோ  பாலாஜி
கார்த்திகை மாதம் வளர்பிறை பஞ்சமி யும் உத்திராடமும் சேர்ந்த
நன்னாள் ,திருச்சுகனூர் அருள்மிகு பத்மாவதிதாயார் ,தாமரையில் தோன்றிய தினம்.
இப்பொழுது விஜய் தொலைக் காட்சியில் தினம் காலை ஐந்து மணியிலிருந்து

அந்தபிரம்மோத்சவக் காட்சிகளைக்  காண்பிக்கிறார்கள்.
இங்கிருக்கும் இரண்டு படங்களைத் தவிர மற்றவை கூகிளார் கொடுத்தவை.

தேவியின் பார்வை விழும் இடங்களில் எல்லாம் வறுமையும்,துக்கமும் ,நோயும்  இல்லாமல் தூளாகப் போய்விடுமாம்.
துன்பம் நேர்கையில் மட்டும் யாழ் எடுக்காமல் எப்பொழுதுமே அவளின் பண் பாடினால்  அழியாத இன்பம் கிடைக்கும் என்பது என் தீவிர நம்பிக்கை.

தாயார் என்றுதானே அவளை  விளிக்கிறோம். அன்னை அவளை நினைத்தால் அதிக வரம் பெறலாம்.
எதையுமே  வேண்டாத வரத்தையும் அவளே அருள்வாள்.




புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

10 comments:

ராமலக்ஷ்மி said...

படங்கள் யாவும் அருமை. பகிர்வுக்கு நன்றி. சிகாகோ கோவில் படம் கோணமும் மேகங்களுடன் வானும் மிக அழகு.

இனி படத்தோடு தேதி தெரியும் ஆப்ஷனை நீக்கிடுங்கள் வல்லிம்மா. தேதி படத்தின் exif விவரங்களுடனேயே நமக்குக் கிடைப்பதால் அவசியமானால் அதில் பார்த்துக் கொள்ளலாம்.

வல்லிசிம்ஹன் said...

சரிம்மா.
காமிராவிலிருந்து எடுக்கணுமா. செய்து பார்க்கிறேன்.

அக்கறை எடுத்துச் சொல்வதற்கு ரொம்ப நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

படங்கள் ரொம்ப அருமையா வந்திருக்கு வல்லிம்மா..

பால கணேஷ் said...

படங்கள் மனதைக் கொள்ளையடித்தன. அதிலும் பத்மாவதித் தாயாரின் படமும், சிகாகோ பாலாஜி கோயில் படமும் கண்ணை நகர்த்த விடவில்லை. அருமையான பகிர்விற்கு நன்றிம்மா...

மாதேவி said...

அன்னைஅவள் தர்சனம் பெற்றோம்.

சிக்காக்கோ பாலாஜி கண்டுகொண்டோம்.

Unknown said...

புகைப்படங்கள் அனைத்தும் அழகாகவும் அருமையாகவும் அமைந்துள்ளன.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல்,நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கணேஷ் ஜி. .அவர்களெ இயல்பிலே அழகு அவதாரங்கள் இல்லையா. அதனால் தான் படங்களும் அழகாக இருக்கின்றன.மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி சிகாகோ கோவில் அருமை மா. நன்றாகக் கவனித்துக் கொள்ளுகிறார்கள். வருகைக்கு மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வியபதி. உங்கள் பின்னூட்டம் உற்சாகம் கொடுக்கிறது. மிகவும் நன்றி.