Friday, August 18, 2006

இராமனும் ஈஸ்வரனும்...1

ஸ்ரீராமனாத ஸ்வாமி சரணம்.
இராமெஸ்வரம் ,ராமன் ஈஸ்வரனைப் பூஜித்த இடம்.ராவணவதம் முடிந்து சீதையுடன் மகிழ்வாகப் புஷ்பக விமானத்தில் ஏறும்போது,விபிஷணப் பட்டாபிஷேகம் முடிந்து அரசாட்சி ஆரம்பமான நிலையிலும் ,சீதை பல உயிர்க்ள் பலியானதை நினைத்து மனம் வருத்தம் கொண்டாளாம்.அப்போது இராமனுக்கும், என்னதான் லோக பாதுகாப்பு
என்றலும் உயிர் வதை தோஷம் பாதிக்கும் என்று அறிவுறுத்தப் பட்டது.சிவனாரைப் பூஜித்து நிவர்த்தி செய்ய வேண்டும் என்று.அங்கிருந்த முனிவர்கள் உணர்த்தினார்கள்.
உடனெ முன்வந்தது யாராக் இருக்க முடியும்?நம்ம ஹனுமான் ஜி தான்.உடனே காசிக்கு சென்று, விஸ்வநாத லிங்கத்தைக் கொண்டு வருவதாக விண்ணில் பாய்ந்து விட்டார்.
சீதையும் இராமனும் முறைப்படி சிவலிங்க அர்ச்சனைக்கு வேண்டிய (அங்கே கிடைக்கக் கூடிய)இலை, பழங்கள் எல்லாம் சேகரிக்க ஆரம்பித்துக் காத்திருக்கலானார்கள்.இந்த சம்பவம் நடப்பது இராமேஸ்வரம் என்று இப்போது அழைக்கப்படும் கடல் கரையில்.
அனுமனுக்கு எதனாலொ தாமதமாகிறது.முஹூர்த்த நேரம் நெருங்கியதால் ராமன் சீதையை நோக்கி, இந்த நேரத்தைத் தவிர்க்கக்கூடாது.நீயெ சிவரூபமான லிங்கத்தை மணலில் பிடித்து வை.பூஜையை ஆரம்பிக்கலாம் என்று சொல்லிவிட்டார்.


அவளும் அவ்வாறே மணலும் நீரும் கலந்து லிங்கம் செய்து வைக்க,இருவரும் ஈஸ்வரனை மனதார வேண்டிக்கொண்டனர்.அவர்கள் இஷ்டப்படியே பாப விமோசனமும் கிடைத்தது.சீதையும் ராமரும் வழிபட்டு முடிக்கும்போது அநுமன் காசிலிங்கத்தோடு வருகிறார்.இங்கோ பூஜை முடிந்துவிட்டது


.அனுமன் கொண்டு வந்த லிங்கத்தைக் கீழே வைத்தார்
விச்வரூபம் எடுத்து அசைத்துப் பார்த்தாலும்
ஸ்வாமி




மனம் வைக்க மாட்டென் என்கிறார்.காசிக்குத் திரும்ப மனமில்லை
அந்த ஸ்வாமி ராமனாதன் ஆகிவிட்டார்.
ராமன் பூஜித்த லிங்கம் ராமலிங்கம்
அனுமன் கொண்டு வந்த லிங்கம் காசிலிங்கம்.
இரண்டு பேருக்கும் கோவில் உண்டு.
அனும்ுக்கும் செந்தூரவர்ணத்தோடு ஒரு தனி சன்னிதி.
நல்ல ஆகிருதியோடு கோவில் வாசல் பக்கம் பாதி உருவம் நிலத்திலும் மீதி உருவம் கடலிலும் இருக்கும்படியான தோற்றம்.
அவ்ர சன்னிதி அருகே நிற்கும்போது காலுக்குக் கீழே கடல் ஓசையிடும் சத்தம் கேட்கும்.
ராமனாதர் கோவில் நந்தி பெரிய வடிவில் உள்ளது.
உள்ளே ஈச்வரனுடன் தாய் பர்வதவர்த்தினி.
ஆடி மாதம் தங்கத் தேரோட்டம், வெள்ளித் தேரொட்டம் உண்டு.
ராமேச்வரம் ஒரு magical place.
பாம்பன் பாலத்தைக் கடக்கும்போதே நம் உற்சாகம்
ஆரம்பம்.முன்னால் இந்த தார்ச் சாலை வருவதற்கு முன்
ராமெச்வரம் -போட் மெயில் ஒன்றுதான் அங்கே போகும்.
நாம் போகும் அந்த ரயிலில் தான் அந்த ஊருக்குப் பால்,தயிர்,காய்கறி,நியூஸ் பேபர் எல்லாம் போகும்.
எங்கள் தந்தை அங்கே தபால்தந்தி அலுவலக மேலாளராக இருந்த 2 வருடமும் ,தினந்தோறும் ஏதாவது நடந்துகொண்டே இருக்கும்.
நாட்டுத் தலைவ்ர வருவார். சென்னைப் பிரமுகர்கள், கவர்னர் ந்று யாராவது ப்ரார்த்தனை செலுத்த வருவார்கள்.
யாத்திரிகர்களால் வாழும் ஊராய் அது இருந்தது.
எனக்குத் தெரிந்து கழுதைகளும் மாடுகளும்
வெளியே உலர்த்தும் புடவைகளை சாப்பிடும் ஒரே ஊர் அதுதான்:-))
முதல் தடவை நாங்கள்(நாங்களும் எங்கள் முதல் புத்திரனும்) 4 நாட்கள் விடுமுறையில் போனபோது,
பாம்பன் பாலத்தின் மேல் ரயில் ஊர்ந்தது இன்னும் நினைவில் இருக்கிறது. கீழே சன்னலுக்கு வெளியே காற்றும் அலை ஓசையும் நம்மை
தாலாட்டும்.
1964 புயல் ஞாபகம் வந்தால் பயம் பற்றிக்கொள்ளும்.
அதில் தானே ஒரு ரயிலோடு பயணிகள் மறைந்தார்கள்.
மேலே இருக்கும் 4ஆவது படம் இரவில் தனுஷ்கோடியின் பிம்பம்.
பழகுவதற்கு இனிய மக்கள். அவ்வளவு வியாபாரம் எடுபடாத நாட்கள் அவை.
இதே பிரயாணம் 2003இல் செய்த போது நிலமை மாறி இருந்தது. (மீண்டும் பார்க்கலாம்

1 comment:

cheena (சீனா) said...

அன்பின் வல்லி சிம்ஹன் - இராமனும் ஈஸ்வரனும் பதிவு அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா